I am Murugeswari, and I am a member of the Dalit Women Federation (DWF). My husband has been working as a Health Worker at Sirunayakkanpatti village, Nilakkotai Taluk, Dindigul District for the past 7 years. We have two boys and a girl. Recently, my husband fell ill. I took him to the Government Hospital at Nilakkottai. He was treated well and returned home after a week. He continued his work. One day, after returning from work in the afternoon, my husband said, “I am tired. Let me rest”. He did not get up till the following morning. With the help of my neighbours, I took him to the hospital. The doctors declared him dead. I was shattered.
Mrs. Lokarani, the evening study centre teacher, met me and consoled me. Later, Lokarani and Savithri, the field worker DWF, met me and inquired about the incident. Savithri asked me, “Did you receive the funeral allowance of Rs 25,000 from the government?” I said, “No”. I was not aware of this government support. Savithri explained that any health worker who dies on the job is entitled to a funeral allowance of Rs 25,000. Both took me to the Panchayat office. With their help, I submitted a petition. I received the funeral allowance of Rs 25,000 after three months.
This is a big support for me. Moreover, I understood the importance of being part of the federation. Thanks to Savithri and Lokarani, who guided me and accompanied me during the most distressing time of my life.
Murugeswari
Member of Dalit Women Federation
வணக்கம்,
எனது பெயர் முருகேஸ்வரி. நான் தலித் பெண்கள் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளேன். எனது கணவர் சுந்தரம் கடந்த 7 ஆண்டுகளாக நிலக்கோட்டை தாலுகா, சிறுநாயக்கன்பட்டி கிராமத்தில் தூய்மை காவலராக பணியாற்றி வந்தார். எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். நாங்கள் குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தோம். திடீரென்று ஒரு நாள் எனது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தோம். ஒரு வாரத்திற்கு பிறகு நலமுடன் வீடு திரும்பினார். ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு சென்றார். எனது குடும்பத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு நாள் மதிய வேளையில், வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய எனது கணவர், அசதியாக இருக்கிறது என்று கூறி படுக்க சென்றார். மறுநாள் காலை வரை படுக்கையிலிருந்து எழவில்லை. நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் தூக்கத்திலிருந்து எழாத காரணத்தினால் பயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். நான் மனம் உடைந்து போனேன். எனது மூன்று குழந்தைகளையும் எவ்வாறு வளர்க்க போகிறேன் என்ற அச்சமும், கவலையும் என்னுள் நிறைந்தது. ஒரு நாள், எனது ஊரை சேர்ந்த மாலை நேர கல்வி மைய ஆசிரியை திருமதி. லோக ராணி, என்னை சந்தித்து நடந்தவை குறித்து விசாரித்தார். அடுத்த நாள் மாலை தமிழ்நாடு தலித் பெ;ணகள் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. சாவித்திரி அவர்களும், திருமதி லோகராணியும் என்னை சந்தித்தனர். மீண்டும் நடந்தவற்றை இருவரிடம் விளக்கி கூறினேன். அப்போது, திருமதி சாவித்திரி அவர்கள், ‘உங்களது கணவர் பணியில் இருக்கும்போது இறந்ததால் ஈம சடங்கிற்கான தொகை ரூ.25,000 பெற்றுக் கொண்டீர்களா’ என்று கேட்டார். எனக்க ஒன்றுமே புரியவில்லை. ‘இல்லை’ எனக் கூறினேன். ‘ஒருவர் தூய்மை காவலராக பணிபுரியும்போது மரணம் அடைந்தால் அவருக்கான ஈம சடங்கு செலவினத்தை அரசு நமக்கு அளிக்கும்’ என்ற விவரத்தை திருமதி சாவித்திரி அவர்கள் விளக்கி கூறினார். கிராமத்திலே பிறந்து, எந்த விவரமும் அறியாமல் வளர்ந்த எனக்கு எங்கு சென்று, யாரை பார்த்து, இது குறித்து கேட்பது என எதுவும் தெரியவில்லை. எனது கணவரின் இறப்பினால் மன வேதனையிலிருந்த என்னை, திருமதி. சாவித்திரி மற்றும் திருமதி. லோகராணி இருவரும் பஞ்சாயத்து அலுவலகம் அழைத்து சென்று, தலைவர், செயல் அலுவலர் போன்றோரிடம் ஈம சடங்கிற்கான நிதி வழங்குவதில் தாமதப்படுத்தியதன் காரணத்தை கேட்டு, அது குறித்து மனுவும் பதிவும் செய்ய உதவினர். அவர்கள் இருவரின் வழிகாட்டுதலின் உதவியால் ஈம சடங்கிற்கான தொகை பஞ்சாயத்து அலுவலகத்தில் பதிவு செய்து மூன்று மாதங்களுக்குள் ரூ.25,000 கிடைத்தது. எனது இக்கட்டான நேரத்தில் அவர்கள் இருவரின் உடனிருப்பு எனக்குள் நம்பிக்கையை தந்து, ஊக்கத்துடன் எனது பணிகளை தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்தது. அவர்களுக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முருகேஸ்வரி
தலித் பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினர், திண்டுக்கல் மாவட்டம்
Comments are closed.